/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: சிந்து, லக்சயா விலகல்
/
பாட்மின்டன்: சிந்து, லக்சயா விலகல்
ADDED : மே 08, 2024 10:36 PM

பாங்காக்: தாய்லாந்து பாட்மின்டனில் இருந்து சிந்து, லக்சயா விலகினர்.
தாய்லாந்தில் சர்வதேச பாட்மின்டன் தொடர் மே 14-19ல் நடக்கவுள்ளது. இதிலிருந்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை சிந்து, இளம் வீரர் லக்சயா சென் விலகினர். சமீபத்தில் நடந்த உபர் கோப்பை தொடரிலும் சிந்து பங்கேற்கவில்லை. இதையடுத்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் மாளவிகா, அஷ்மிதா, சமியா, ஆகர்ஷி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். ஆண்கள் ஒற்றையரில் இந்தியா சார்பில் உலகின் 'நம்பர்-9' வீரர் பிரனாய், கிரண் ஜார்ஜ், சதிஷ் குமார் களமிறங்குகின்றனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் உலகின் 'நம்பர்-3' இடத்திலுள்ள சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, முதல் சுற்றில் 'நம்பர்-71' வது இடத்திலுள்ள மலேசிய ஜோடியை சந்திக்க உள்ளது. ஒருவேளை அரையிறுதிக்கு முன்னேறும் பட்சத்தில் தாமஸ் கோப்பை தொடரில் கோப்பை வென்ற சீனாவின் ஜி டிங், ரென் ஜியாங் ஜோடியை சந்திக்க நேரிடும்.

