sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

கோலி, ரோகித் ஒப்பந்தம் தொடரும்

/

கோலி, ரோகித் ஒப்பந்தம் தொடரும்

கோலி, ரோகித் ஒப்பந்தம் தொடரும்

கோலி, ரோகித் ஒப்பந்தம் தொடரும்


ADDED : மே 14, 2025 10:22 PM

Google News

ADDED : மே 14, 2025 10:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், சமீபத்தில் புதிய சம்பள ஒப்பந்த பட்டியல் வெளியானது. குறிப்பிட்ட கால இடைவெளியில் 3 டெஸ்ட் அல்லது 8 ஒருநாள் அல்லது 5 சர்வதேச 'டி-20' போட்டியில் விளையாடிய வீரர்கள் இப்பட்டியலில் இடம் பெறுவர்.

'ஏ+ கிரேடில்' இடம் பெற்ற சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவிந்திர ஜடேஜாவுக்கு ரூ. 7 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனிடையே ரோகித், கோலி என இருவரும் டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றனர். தவிர, 2024 ல் சர்வதேச 'டி-20' அரங்கில் இருந்தும் விடைபெற்றனர்.

ஒருநாள் போட்டிகளில் மட்டும் பங்கேற்க உள்ளனர். இதனால் இவர்களது சம்பள ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுந்தது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் தேவாஜித் சைகியா கூறுகையில்,'' டெஸ்ட், சர்வதேச 'டி-20' ல் இருந்து ஓய்வு பெற்றாலும் ரோகித், கோலியின் சம்பள ஒப்பந்தம் தொடரும். ஏனெனில் அவர்கள், இந்திய கிரிக்கெட்டின் ஒருபகுதியாகத் தான் இன்னும் உள்ளனர். 'ஏ+' கிரேடுக்கு உரிய அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us