/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரஞ்சி கோப்பை: மீண்டது தமிழகம்
/
ரஞ்சி கோப்பை: மீண்டது தமிழகம்
ADDED : நவ 16, 2025 10:58 PM

கோவை: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் பாபா இந்திரஜித், சித்தார்த் சதம் விளாச, தமிழக அணி சரிவிலிருந்து மீண்டது.
கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் தமிழகம், உ.பி., அணிகள் விளையாடுகின்றன.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தமிழக அணிக்கு பாலசுப்ரமணியம் சச்சின் (2), நாராயண் ஜெகதீசன் (8), பிரதோஷ் ரஞ்சல் பால் (2), வித்யுத் (11) ஏமாற்றினர். தமிழக அணி 71 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின் இணைந்த பாபா இந்திரஜித், ஆன்ட்ரி சித்தார்த் ஜோடி நம்பிக்கை தந்தது. உ.பி., பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்த இருவரும் சதம் கடந்தனர்.
ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 282 ரன் எடுத்திருந்தது. இந்திரஜித் (128), சித்தார்த் (121) அவுட்டாகாமல் இருந்தனர்.

