/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டில்லியை வென்றது பெங்களூரு: புரோ கபடி லீக் போட்டியில்
/
டில்லியை வென்றது பெங்களூரு: புரோ கபடி லீக் போட்டியில்
டில்லியை வென்றது பெங்களூரு: புரோ கபடி லீக் போட்டியில்
டில்லியை வென்றது பெங்களூரு: புரோ கபடி லீக் போட்டியில்
ADDED : அக் 18, 2025 10:21 PM

புதுடில்லி: புரோ கபடி லீக் போட்டியில் பெங்களூரு அணி 33-23 என, டில்லியை வீழ்த்தியது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. தமிழ் தலைவாஸ், 'நடப்பு சாம்பியன்' ஹரியானா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. டில்லியில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, டில்லி அணிகள் மோதின.
முதல் பாதி முடிவில் பெங்களூரு அணி 12-10 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணிக்கு 21 புள்ளி கிடைத்தது. ஆட்டநேர முடிவில் பெங்களூரு அணி 33-23 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணிக்கு அலிரேசா (13 புள்ளி) கைகொடுத்தார். டில்லி அணி சார்பில் மோகித் 11 புள்ளி பெற்றார்.
இதுவரை விளையாடிய 16 போட்டியில், 9 வெற்றி, 7 தோல்வி என, 18 புள்ளிகளுடன் பெங்களூரு அணி 3வது இடத்துக்கு முன்னேறியது. ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்த டில்லி அணி (26 புள்ளி, 13 வெற்றி, 4 தோல்வி) 2வது இடத்தில் உள்ளது.
மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 40-31 என, புனே அணியை வீழ்த்தியது.