தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/செஸ்: ஆனந்த் பங்கேற்பு

செஸ்: ஆனந்த் பங்கேற்பு

செஸ்: ஆனந்த் பங்கேற்பு


ADDED : மே 04, 2024 09:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2024 09:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மொராக்கோவில் நடக்கவுள்ள செஸ் தொடரில் இந்தியாவின் ஆனந்த், நார்வேயின் கார்ல்சன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மொராக்கோவில் வரும் மே 18-19ல் காசாபிளாங்கா செஸ் தொடர் நடக்கவுள்ளது. இதில் நான்கு கண்டங்களை சேர்ந்த முன்னணி கிராண்ட்மாஸ்டர்ஸ் பங்கேற்கின்றனர். ஆசியா சார்பில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் களமிறங்குகிறார். ஐரோப்பா சார்பில் உலகின் 'நம்பர்-1' நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் விளையாடுகிறார்.

வடக்கு அமெரிக்கா சார்பில் உலகின் 'நம்பர்-3' அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, ஆப்ரிக்கா சார்பில் ஏழு முறை ஆப்ரிக்க செஸ் சாம்பியன் பட்டம் வென்ற எகிப்தின் அமின் பாசின் பங்கேற்கின்றனர்.

இதில் முன்னாள் உலக சாம்பியன்களான ஆனந்த், கார்ல்சன் மோதும் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us