/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வெள்ளி வென்றார் பவானி தேவி * வாள் சண்டை போட்டியில்...
/
வெள்ளி வென்றார் பவானி தேவி * வாள் சண்டை போட்டியில்...
வெள்ளி வென்றார் பவானி தேவி * வாள் சண்டை போட்டியில்...
வெள்ளி வென்றார் பவானி தேவி * வாள் சண்டை போட்டியில்...
ADDED : அக் 18, 2025 10:37 PM

இஸ்தான்புல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் 'சீனியர்' சாப்ரே சேட்டிலைட் வாள் சண்டை போட்டி நடந்தது. இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார்.
இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற பவானி தேவி, அரையிறுதியில், உலக சாம்பியன்ஷிப்பில் இருமுறை தங்கம் வென்ற, உலகின் 'நம்பர்-5', கிரீசின் தேஸ்பினாவை 15-13 என வீழ்த்தினார்.
அடுத்து நடந்த பைனலில் பவானி தேவி, உள்ளூர் வீராங்கனை (துருக்கி) நிசானுர் எர்பிலை எதிர்கொண்டார். இதில் கடும் போராட்டத்துக்குப் பின் 12-15 என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தினார். கிரீசின் தேஸ்பினா, சிங்கப்பூரின் ஹெங் ஜூலியட், வெண்கலம் வென்றனர்.