/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பெங்களூருவை வென்றது பாட்னா: புரோ கபடி லீக் 'எலிமினேட்டரில்'
/
பெங்களூருவை வென்றது பாட்னா: புரோ கபடி லீக் 'எலிமினேட்டரில்'
பெங்களூருவை வென்றது பாட்னா: புரோ கபடி லீக் 'எலிமினேட்டரில்'
பெங்களூருவை வென்றது பாட்னா: புரோ கபடி லீக் 'எலிமினேட்டரில்'
ADDED : அக் 27, 2025 10:47 PM

புதுடில்லி: புரோ கபடி 'எலிமினேட்டர்-2' போட்டியில் பாட்னா அணி 46-37 என, பெங்களூருவை வீழ்த்தியது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. டில்லியில் நடந்த 'எலிமினேட்டர்-2' போட்டியில் பாட்னா, பெங்களூரு அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய பாட்னா வீரர்கள், பெங்களூரு அணியினரை இரு முறை 'ஆல்-அவுட்' செய்தனர். முதல் பாதி முடிவில் பாட்னா அணி 27-13 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் ஓரளவு எழுச்சி கண்ட பெங்களூரு அணிக்கு 24 புள்ளி கிடைத்தது. ஆட்டநேர முடிவில் பாட்னா அணி 46-37 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பாட்னா அணிக்கு அயன் (19 புள்ளி) கைகொடுத்தார்.
பாட்னா அணி, 'எலிமினேட்டர்-3' போட்டியில் (அக். 28) தெலுங்கு டைட்டன்ஸ் அணியை சந்திக்கிறது.

