/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
சுமித் நாகல் தோல்வி: பெங்களூரு ஓபனில் ஏமாற்றம்
/
சுமித் நாகல் தோல்வி: பெங்களூரு ஓபனில் ஏமாற்றம்
ADDED : பிப் 17, 2024 08:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: பெங்களூரு ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வியடைந்தார்.
பெங்களூருவில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சுமித் நாகல், இத்தாலியின் ஸ்டெபானோ நபோலிடானோ மோதினர். 'டை பிரேக்கர்' வரை நீடித்த முதல் செட்டை 6-7 என இழந்த சுமித் நாகல், இரண்டாவது செட்டை 4-6 எனக் கோட்டைவிட்டார்.
இரண்டு மணி நேரம், 17 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய சுமித் நாகல் 6-7, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.