/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
காலிறுதியில் சுமித் நாகல்: பெங்களூரு ஓபனில் முன்னேற்றம்
/
காலிறுதியில் சுமித் நாகல்: பெங்களூரு ஓபனில் முன்னேற்றம்
காலிறுதியில் சுமித் நாகல்: பெங்களூரு ஓபனில் முன்னேற்றம்
காலிறுதியில் சுமித் நாகல்: பெங்களூரு ஓபனில் முன்னேற்றம்
ADDED : பிப் 15, 2024 10:47 PM

பெங்களூரு: பெங்களூரு ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் சுமித் நாகல் முன்னேறினார்.
பெங்களூருவில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், ஹாங்காங்கின் கோலிமன் வோங் மோதினர். முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய சுமித் நாகல், இரண்டாவது செட்டை 7-5 என போராடி தன்வசப்படுத்தினார்.
ஒரு மணி நேரம், 45 நிமிடம் நீடித்த போட்டியில் சுமித் நாகல் 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடி, ஜெர்மனியின் மார்க் வால்னர், ஜேக்கப் ஷ்னைட்டர் ஜோடியை சந்தித்தது.
இதில் ராம்குமார், மைனேனி ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

