sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலையில் குப்பையை சிதறும் லாரிகளால் சுகாதார பாதிப்பு

/

சாலையில் குப்பையை சிதறும் லாரிகளால் சுகாதார பாதிப்பு

சாலையில் குப்பையை சிதறும் லாரிகளால் சுகாதார பாதிப்பு

சாலையில் குப்பையை சிதறும் லாரிகளால் சுகாதார பாதிப்பு


ADDED : ஜூலை 23, 2024 01:28 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 01:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், கொளத்துார் பகுதியில் உள்ள குப்பை கிடங்கு எதிரில், சாலை முழுதும் குப்பை நிறைந்து காணப்படுகிறது. குப்பை கிடங்கிற்கு வரும் லாரிகள், குப்பையை சாலையிலேயே கொட்டிச் செல்கின்றன. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலையில் குப்பை கொட்டுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.ஆனந்தன், சிங்கபெருமாள் கோவில்.

அருள் நகர் செல்லும் சாலையில்

குப்பை குவித்து அட்டூழியம்

ஊரப்பாக்கம் ஊராட்சி, பிரியா நகர் பிரதான சாலை வழியாக, அருள் நகர் செல்லும் வழியில், ஐந்து கண் ரயில்வே பாலம் உள்ளது.

அதன் அருகில், தண்டவாளத்தை ஒட்டியவாறு, அதிக அளவில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. தேங்கி கிடக்கும் குப்பையால் அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது.

குப்பையை அகற்ற வேண்டி, பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு மனு அளித்தும், இதுவரை குப்பையை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே, தேங்கியுள்ள குப்பையை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.சுப்பிரமணியன், அபிராம் நகர்.






      Dinamalar
      Follow us