/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டில் வரும் 16ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
/
செங்கல்பட்டில் வரும் 16ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
செங்கல்பட்டில் வரும் 16ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
செங்கல்பட்டில் வரும் 16ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : ஆக 13, 2024 09:21 PM
மறைமலை நகர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்காக, வரும் 16ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 16ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள், நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்க உள்ளனர். விருப்பமுள்ளவர்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
இந்த முகாமில், 8, 10, பிளஸ் 2, பட்டப்படிப்பு, இஞ்சினியரிங், ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், செவிலியர்கள், மருந்தாளர்கள், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மேலும், 18 -- 35 வயது வரை உள்ளவர்கள், கல்வி சான்றிதழ், பயோடேட்டா, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன், 19ம் தேதி காலை 10:00 -- 2:00 மணிக்குள், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பங்கேற்று பயன்பெறலாம்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுவோரின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு, 044 -- 2742 6020 மற்றும் 63834 60933 / 94868 70577என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.