/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை அருகே 417 கிலோ போதை பொருள் அழிப்பு
/
செங்கை அருகே 417 கிலோ போதை பொருள் அழிப்பு
ADDED : ஆக 15, 2024 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட, 417 கிலோ போதைப் பொருட்கள், நீதிமன்ற உத்தரவுப்படி அழிக்கப்பட்டன.
போதைப் பொருள் வழக்குகளில் கைப்பற்றப்படும் போதைப் பொருட்கள், செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள ஜி.ஜே.மல்டிகிளேவ் இந்தியா பிரைவேட் என்ற தனியார் நிறுவனம் வாயிலாக அழிக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் நேற்று, 70 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 417 கிலோ கஞ்சா மற்றும், 11 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருட்கள், நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று அழிக்கப்பட்டன.
அழிக்கப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு, 42.4 லட்சம் ரூபாய் என, துணை கமிஷனர் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.

