/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரம், திருவள்ளூர் தடத்தில் 8 மின்சார ரயில்கள் ரத்து
/
தாம்பரம், திருவள்ளூர் தடத்தில் 8 மின்சார ரயில்கள் ரத்து
தாம்பரம், திருவள்ளூர் தடத்தில் 8 மின்சார ரயில்கள் ரத்து
தாம்பரம், திருவள்ளூர் தடத்தில் 8 மின்சார ரயில்கள் ரத்து
ADDED : செப் 09, 2024 11:54 PM
சென்னை : ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, தாம்பரம், திருவள்ளூர் தடத்தில் எட்டு மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடற்கரை - தாம்பரம் இரவு 8:25, 8:55, இரவு 10:20 மணி ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, திருவள்ளூர் - கடற்கரை இரவு 9:35, கடற்கரை - திருவள்ளூர் இரவு 7:50 மணி ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது. கடற்கரை - அரக்கோணம் காலை 4:05 மணி ரயில் வரும் 11, 12ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மேலும், கும்மிடிப்பூண்டி - கடற்கரை இரவு 9:55, கடற்கரை கும்மிடிப்பூண்டி இரவு 10:45 மணி ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது
பாதி வழியில் ரத்து
கடற்கரை - தாம்பரம் இரவு 11:05, 11:30, 11:59 மணி ரயில்கள் இன்றும், நாளையும் எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.
கடற்கரை - செங்கல்பட்டு அதிகாலை 3:55 மணி ரயில் இன்றும், நாளையும் எழும்பூரில் இருந்து செல்லும். அதுமட்டுமல்லாமல், செங்கல்பட்டு - கடற்கரை இரவு 9:10, திருமால்பூர் - கடற்கரை இரவு 8:00மணி ரயில்கள் இன்றும், நாளையும், எழும்பூர் வரை மட்டுமே செல்லும். மேலம், செங்கல்பட்டு - கடற்கரை இரவு 10:10, 11:00 மணி ரயில்கள் இன்றும், நாளையும் எழும்பூர் வரை மட்டுமே செல்லும். கூடுவாஞ்சேரி - கடற்கரை இரவு 10:10, 10:40, 11:15 மணி ரயில்கள் இன்றும், நாளையும் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.