sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நிதி ஒதுக்கி 9 மாதங்களுக்கு பின் சாலை அமைக்கும் பணி துவக்கம்

/

நிதி ஒதுக்கி 9 மாதங்களுக்கு பின் சாலை அமைக்கும் பணி துவக்கம்

நிதி ஒதுக்கி 9 மாதங்களுக்கு பின் சாலை அமைக்கும் பணி துவக்கம்

நிதி ஒதுக்கி 9 மாதங்களுக்கு பின் சாலை அமைக்கும் பணி துவக்கம்


ADDED : ஆக 04, 2024 12:32 AM

Google News

ADDED : ஆக 04, 2024 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

றைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி நான்காவது வார்டில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள காந்தி சாலை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கானோர் ரயில் நிலையம், மருத்துவமனை, கடைகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.

இந்த சாலை சிதிலமடைந்து காணப்பட்டது. எனவே, இங்கு சிமென்ட் சாலையாக மேம்படுத்த வேண்டும் என, இப்பகுதிவாசிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாவட்ட கவுன்சிலர் நிதியில், 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்து, 9 மாதங்கள் கடந்த நிலையில், புதிய சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்படவில்லை.

இது குறித்து, நம் நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, புதிதாக சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள், நேற்று காலை துவங்கப்பட்டு வேகமாக நடந்து வருகின்றன.

இந்த பணிகளை, செங்கல்பட்டு தி.மு.க., -- எம்.எல்.ஏ., வரலட்சுமி ஆய்வு செய்து, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார்.






      Dinamalar
      Follow us