sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை, காஞ்சி அறநிலைய உதவி கமிஷனர்கள் நியமனம்

/

செங்கை, காஞ்சி அறநிலைய உதவி கமிஷனர்கள் நியமனம்

செங்கை, காஞ்சி அறநிலைய உதவி கமிஷனர்கள் நியமனம்

செங்கை, காஞ்சி அறநிலைய உதவி கமிஷனர்கள் நியமனம்


ADDED : ஜூன் 30, 2024 10:51 PM

Google News

ADDED : ஜூன் 30, 2024 10:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்: ஹிந்து சமய அறநிலையத்துறையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளின் உதவி கமிஷனர்களாக, பிற பகுதியினர் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டனர்.

அறநிலையத்துறையின் காஞ்சிபுரம் மண்டலத்தில், செங்கல்பட்டு உதவி கமிஷனராக லட்சுமிகாந்த பாரதிதாசன் பணியாற்றினார்.

காஞ்சிபுரம் உதவி கமிஷனர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், அங்கும் உதவி கமிஷனராக, முழு கூடுதல் பொறுப்பு வகித்தார். நேற்று பணியிலிருந்து, அவர் ஓய்வு பெற்றார்.

இதை முன்னிட்டு, சென்னையில், கடந்த 28ம் தேதி, அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அத்துறை அமைச்சர் சேகர்பாபு, காஞ்சிபுரம் மண்டல இணை கமிஷனர் வான்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை வடபழனி ஆண்டவர் கோவில் துணை கமிஷனர் ஹரிஹரன், செங்கல்பட்டு உதவி கமிஷனராகவும், வேலுார் துணை கமிஷனர் சரிபார்ப்பு அலுவலர் கருணாநிதி, காஞ்சிபுரம் உதவி கமிஷனராகவும், முழு கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கான உத்தரவை, கமிஷனர் முரளிதரன் பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us