/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறப்பு
/
தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறப்பு
ADDED : மார் 02, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம், மாமல்லபுரம் அடுத்த, மணமையைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி லோகநாயகி, 40. கடந்த பிப்., 13ம் தேதி, வீட்டில் சமையல் அடுப்பு நெருப்பில் குளிர் காய்ந்த போது, உடலில் தீப்பற்றி, தீக்காயமடைந்ததாக கூறப்படுகிறது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று காலை 5:15 மணியளவில் இறந்தார். மாமல்லபுரம் போலீசில், அவரது கணவர் அளித்த புகாரின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.