sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கல் குவாரி பள்ளத்தில் மூழ்கி சட்டமங்கலம் பிளம்பர் பலி

/

கல் குவாரி பள்ளத்தில் மூழ்கி சட்டமங்கலம் பிளம்பர் பலி

கல் குவாரி பள்ளத்தில் மூழ்கி சட்டமங்கலம் பிளம்பர் பலி

கல் குவாரி பள்ளத்தில் மூழ்கி சட்டமங்கலம் பிளம்பர் பலி


ADDED : ஜூன் 10, 2024 11:10 PM

Google News

ADDED : ஜூன் 10, 2024 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர் : மறைமலை நகர் அடுத்த சட்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 38. பிளம்பர் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை, ஆப்பூர் அடுத்த தாசரிகுன்னத்துார் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் குளித்த போது செந்தில்குமார், திடீரென தண்ணீரில் மூழ்கினார். அச்சமடைந்த உறவினர்கள், பாலுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பாலுார் போலீசார், கல்குவாரி குட்டையில் இறங்கி தேடினர். இரவு நேரம் என்பதால், போதிய வெளிச்சம் இல்லாமல், செந்தில்குமார் உடலை தேடுவதில் தடை ஏற்பட்டது.

அதனால், நேற்று காலை 8:00 மணிக்கு மீண்டும் தேடும் பணி துவங்கியது.

ஒன்பது மணி நேர தேடுதலுக்கு பின், மாலை 4:00 மணிக்கு செந்தில்குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பாலுார் போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us