/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மாவட்ட செஸ் வரும் 25ல் நடக்கிறது
/
செங்கை மாவட்ட செஸ் வரும் 25ல் நடக்கிறது
ADDED : ஆக 14, 2024 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:சேலஞ்சர்ஸ் செஸ் அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான ஒரு நாள் செஸ் போட்டி, வரும் 25ம் தேதி, செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் கிராமத்தில் உள்ள பிருந்தாவன் பப்ளிக் பள்ளியில் நடைபெற உள்ளது.
பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் இந்த போட்டியில், 16 வயதுக்கு உட்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம். இப்போட்டிகளில் பங்கேற்று, முதல் 15 இடங்களில் வெற்றி பெறும் மாணவ -- மாணவியருக்கு, கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு, https://Easypaychess.com மற்றும் https://Chessentry.in என்ற இணையதளத்திலும், 99405 67200 மற்றும் 99400 58265 ஆகிய மொபைல் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.