sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கோடை விடுமுறை எதிரொலி சிலம்பத்தில் சிறுவர்கள் ஆர்வம்

/

கோடை விடுமுறை எதிரொலி சிலம்பத்தில் சிறுவர்கள் ஆர்வம்

கோடை விடுமுறை எதிரொலி சிலம்பத்தில் சிறுவர்கள் ஆர்வம்

கோடை விடுமுறை எதிரொலி சிலம்பத்தில் சிறுவர்கள் ஆர்வம்


ADDED : மே 04, 2024 10:41 PM

Google News

ADDED : மே 04, 2024 10:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:பாரம்பரிய தற்காப்பு கலைகளில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. சிலம்பம், மல்யுத்தம், களரி, வாள், கேடயம் போன்ற கலைகள், பழங்கால தற்காப்பு கலைகளாக சிறந்து விளங்கின.

தற்போதைய காலகட்டத்தில், இக்கலைகள் படிப்படியாக வழக்கொழிந்து வருகின்றன. தற்கால இளைய தலைமுறையினர், பண்டைய வீரக் கலைகள் குறித்து அறியவும், பயிற்சி பெறவும், கலை ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி, பயிற்சியும் அளிக்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள், சிறுவர்கள், சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில், தற்காப்பு கலை வீரர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us