sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விழாவுக்கு அழைக்காததால் காங்.,- எம்.எல்.ஏ., போராட்டம்

/

விழாவுக்கு அழைக்காததால் காங்.,- எம்.எல்.ஏ., போராட்டம்

விழாவுக்கு அழைக்காததால் காங்.,- எம்.எல்.ஏ., போராட்டம்

விழாவுக்கு அழைக்காததால் காங்.,- எம்.எல்.ஏ., போராட்டம்


ADDED : ஆக 12, 2024 11:58 PM

Google News

ADDED : ஆக 12, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி : காமராஜர் துறைமுகத்தின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், பொன்னேரி அரசு கலைக்கல்லுாரியில் 5.25 கோடி ரூபாயில், புதிய வகுப்பறை கட்டடம் அமைக்கும் பணிகள் நடந்தன. தரை, முதல் மற்றும் இரண்டாவது என மூன்று தளங்களில், 18,480 சதுர அடியில், 15 வகுப்பறைகள் கொண்ட கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டன.

இதன் திறப்பு விழா நேற்று, காமராஜர் துறைமுக மேலாண்மை இயக்குனர் ஐரீன் சிந்தியா தலைமையில் நடந்தது. காமராஜர் துறைமுகத்தின் தலைவர் சுனீல் பாலிவால், புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

கல்லுாரி கட்டட திறப்பு விழாவிற்கு எம்.பி., - எம்.எல்.ஏ., உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை அழைக்கவில்லை என்பதால், அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், திறப்பு விழாவிற்கு வந்த துறைமுக தலைவரின் வாகனத்தை நிறுத்தி, பொன்னேரி காங்.,- எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், தொண்டர்களுடன் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவர்களை துறைமுக தலைவர் சுனீல் பாலிவால் சமாதானம் செய்ய முயன்றார்.

காவல் துறையினர் அவர்களிடம் பேச்சு நடத்தி, வாகனத்திற்கு வழி ஏற்படுத்தினர். அதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் துறைமுக தலைவர் மற்றும் அதிகாரிகள் கட்டட திறப்பு விழாவிற்கு வந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால், துறைமுக அதிகாரிகள் நிகழ்ச்சியை பாதியில் முடித்து சென்றனர்.






      Dinamalar
      Follow us