sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விதிமீறி எதிர்திசையில் செல்லும் கனரக வாகனங்களால் அபாயம்

/

விதிமீறி எதிர்திசையில் செல்லும் கனரக வாகனங்களால் அபாயம்

விதிமீறி எதிர்திசையில் செல்லும் கனரக வாகனங்களால் அபாயம்

விதிமீறி எதிர்திசையில் செல்லும் கனரக வாகனங்களால் அபாயம்


ADDED : ஜூலை 12, 2024 10:55 PM

Google News

ADDED : ஜூலை 12, 2024 10:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதூர் சாலை 25 கி.மீ., தூரம் உடையது. இந்த சாலையில் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் என, தினமும் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

ஜி.எஸ்.டி., சாலை -- ஸ்ரீபெரும்புதூர் சாலை சந்திப்பில் அதிக விபத்துகள் நடைபெற்று வருவதால், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் வாகனங்கள், 1 கி.மீ., தூரம் உள்ள மெல்ரோசாபுரம் சந்திப்பில் திரும்பி செல்ல வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த பகுதியில் பகல் நேரங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வருவதால், கனரக வாகன ஓட்டுனர்கள் முறையாக சென்று வருகின்றனர்.

இரவு நேரங்களில் வரும் கனரக வாகன ஓட்டிகள், ஸ்ரீபெரும்புதூர் சாலை மற்றும் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில் திரும்பி, விபத்து ஏற்படுத்தும் வகையில், எதிர் திசையில் சென்று சாலையை கடந்து செங்கல்பட்டு நோக்கி செல்கின்றனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

இரவு நேரங்களில் இந்த பகுதியை கடக்கும் வாகனங்கள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்கின்றன.

கனரக லாரி ஓட்டுனர்கள் போக்குவரத்து போலீசாரால் அமைக்கப்பட்டு உள்ள இரும்பு பேரிகார்டு தடுப்புகளை ஓரங்கட்டி விட்டு, எதிர் திசையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் செல்கின்றனர்.

ஏற்கனவே, இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் கூட அரசு பேருந்து -- சரக்கு வாகனம் மோதியது. இதன் காரணமாக, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே, இவற்றை தடுக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us