/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : மார் 08, 2025 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர், திருப்போரூரில், 'எய்டு இந்தியா' தன்னார்வ அமைப்பு சார்பில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
பேரணியில் மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள் பங்கேற்று, போதை பொருள் ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி, ஓ.எம்.ஆர்., சாலையில் பேரணி சென்றனர்.
அப்போது, போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, கோஷங்களை எழுப்பி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிறைவில், போதை பொருட்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம் என, அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.