sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெண் போலீசின் கையை கிழித்த போதை வாலிபர்கள் கைது

/

பெண் போலீசின் கையை கிழித்த போதை வாலிபர்கள் கைது

பெண் போலீசின் கையை கிழித்த போதை வாலிபர்கள் கைது

பெண் போலீசின் கையை கிழித்த போதை வாலிபர்கள் கைது


ADDED : ஆக 27, 2024 01:10 AM

Google News

ADDED : ஆக 27, 2024 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வருபவர் கவுசல்யா, 26. இவர், நேற்று முன்தினம் இரவு ராயப்பேட்டை வி.எம்., தெருவில் உள்ள முண்டகக்கண்ணியம்மன் கோவில் திருவிழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது வாலிபர்கள் சிலர், மக்களுக்கு இடையூறாக மதுபோதையில் குத்தாட்டம் போட்டுள்ளனர். அவர்களை கவுசல்யா கலைந்து செல்லும்படி கூறியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த நபர்களில் ஒருவர், தான் கையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் கவுசல்யாவின் கையில் கிழித்துள்ளார்.

இதில் காயமடைந்த பெண் காவலருக்கு, ராயப்பேட்டை மருத்துவமனையில் கையில், ஆறு தையல்கள் போடப்பட்டன. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ராயப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த அஜய் ராகுல், 23, ராயப்பேட்டையச் சேர்ந்த சசிகுமார், 20, மணிகண்டன், 19, சரவணன், 18, ஸ்ரீதர், 22, திருவல்லிக் கேணியைச் சேர்ந்த கிேஷார், 19, ஆகிய ஆறு பேரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us