/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விபத்தில் காயமடைந்த முதியவர் பலி
/
விபத்தில் காயமடைந்த முதியவர் பலி
ADDED : மார் 08, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம், சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் அல்லிமுத்து, 64. ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று முன்தினம் ஆட்டோவில், மனைவி கஸ்துாரி, 55, என்பவருடன் மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி பகுதியில், மாலை 6:30 மணியளவில் கடந்தார். அப்போது, பின்னால் வந்த கார், ஆட்டோவில் மோதி, தம்பதி காயமடைந்தனர்.
அரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில், அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை 3:30 மணியளவில், அல்லிமுத்து இறந்தார். மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.