ADDED : மே 04, 2024 10:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூணாம்பேடு:செய்யூர் அருகே தண்ணீர்பந்தல் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் வயல்வெளி பகுதியில் மயானம் உள்ளது.
பல ஆண்டுகளாக மயான பாதைக்கு சாலை வசதி இல்லாத நிலை நீடித்து வருகிறது. மேலும், மழைக்காலத்தில் பாதையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால், இவ்வழியே செல்லும் கிராம வாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மயான பாதைக்கு தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.