sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குட்கா கடத்திய சகோதரர்கள் கைது

/

குட்கா கடத்திய சகோதரர்கள் கைது

குட்கா கடத்திய சகோதரர்கள் கைது

குட்கா கடத்திய சகோதரர்கள் கைது


ADDED : மே 04, 2024 09:52 PM

Google News

ADDED : மே 04, 2024 09:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள், மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, மண்ணுார் கூட்டுச்சாலை சந்திப்பில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருவள்ளூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி முட்டைகள் ஏற்றி வந்த மினி லோடு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர்.

அதில், முன்புறம் முட்டைகளை அடுக்கி, அதன் பின்னால் மூட்டை மூட்டையாக குட்கா, ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வருவது தெரிய வந்தது. விசாரணையில், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு, மினி லோடு ஆட்டோவில் முட்டை விற்பனை செய்வது போல, குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

இதையடுத்து, ஆட்டோவில் வந்த திருவள்ளூர் பாப்பரம்பாக்கத்தைச் சேர்ந்த நாகராஜ், 34, மற்றும் அவரது சகோதரர், சிவா, 24, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 44,000 ரூபாய் மதிப்பிலான 77 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us