sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு துவக்கம்

/

கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு துவக்கம்

கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு துவக்கம்

கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு துவக்கம்


ADDED : ஜூன் 06, 2024 12:49 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளுக்கு உட்பட்டஅனைத்து பகுதிகளிலும்,கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்தேக்கம் அடைந்து, கழிவுநீர் சீராக செல்லாமல் துர்நாற்றம் வீசியது.

இது குறித்து, பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், நகராட்சி தலைவர் கார்த்திக்,நகராட்சி கமிஷனர் தாமோதரன் ஆகியோர் உத்தரவின்படி, நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து கழிவுநீர் கால்வாய்களையும் துார்வாரி சீரமைக்கும் பணிதுவங்கியது.

நேற்று, நந்திவரம்- காமராஜபுரத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் தெருவில், கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்பட்டது.

அப்போது, கால்வாயில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் ஆகியவற்றை அகற்றி,கழிவுநீர் சீராக செல்லும் வகையில், நகராட்சி துாய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.






      Dinamalar
      Follow us