/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊரப்பாக்கத்தில் உள்ளாட்சி துறை இயக்குனர் ஆய்வு
/
ஊரப்பாக்கத்தில் உள்ளாட்சி துறை இயக்குனர் ஆய்வு
ADDED : ஆக 09, 2024 10:33 PM
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை இயக்குனர் பொன்னையா, நேற்று ஆய்வு மேற்கொண்டார். உடன், கலெக்டர் அருண்ராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்.
அப்போது, ஊரப்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அங்கு இருந்த ஊராட்சி செயலர் கருணாகரன், நடந்து வரும் பணிகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து, கிளாம்பாக்கம் ஈஸ்வரன் கோவில் தெருவில் நடந்து வரும் சாலை பணிகளை பார்வையிட்டார்.
பின், ஊரப்பாக்கம் பிரியா நகரில், 34 லட்சம் ரூபாய் மதிப்பில் நடக்கும், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.