sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து 6 சவரன் திருட்டு

/

காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து 6 சவரன் திருட்டு

காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து 6 சவரன் திருட்டு

காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து 6 சவரன் திருட்டு


ADDED : செப் 11, 2024 12:51 AM

Google News

ADDED : செப் 11, 2024 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்,:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் குப்பத்தில், காளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம், பூஜை முடிந்து, 6:00 மணிக்கு கோவில் பூசாரி கோவிலை பூட்டிச் சென்றார்.

இந்நிலையில், நேற்று மதியம் அந்த வழியாக சென்ற அப்பகுதிவாசிகள், கோவில் வெளிப்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது, கோவில் உள்ளே இருந்த இரண்டு பீரோக்களை திறந்து, அம்மனுக்கு அணிவிக்கப்படும் தாலி, கம்மல், செயின் உள்ளிட்ட, 6 சவரன் மதிப்பிலான நகை திருடு போயிருப்பதை அறிந்தனர்.

பின், சூணாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வழக்குப்பதிந்து, கோவிலில் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

திருடிச் சென்ற மர்ம நபர்கள், அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த 'சிசிடிவி' கேமராக்களையும் உடைத்து அட்டூழியம் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us