sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வேளாண் கூட்டுறவு சங்கம் சார்பில் 73 பயனாளிகளுக்கு கடன் உதவி

/

வேளாண் கூட்டுறவு சங்கம் சார்பில் 73 பயனாளிகளுக்கு கடன் உதவி

வேளாண் கூட்டுறவு சங்கம் சார்பில் 73 பயனாளிகளுக்கு கடன் உதவி

வேளாண் கூட்டுறவு சங்கம் சார்பில் 73 பயனாளிகளுக்கு கடன் உதவி


ADDED : ஜூலை 27, 2024 01:34 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கடப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், பல்வேறு தொழில்கள் துவங்க, 73 பயனாளிகளுக்கு, நேற்று கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் வாயிலாக, மகளிர் சுய உதவிக்குழுகளுக்கான சிறு வணிகக்கடன், ஆதரவற்ற கைம்பெண் மற்றும் சம்பளக்கடன் என, 69 பயனாளிகளுக்கு, 6.59 லட்சம் ரூபாய் கடன் வழங்க தேர்வு செய்யப்பட்டனர்.

கடப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், நான்கு பயனாளிகள், 4.74 லட்சம் ரூபாய் கடன் வழங்க தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், 73 பயனாளிகளுக்கும், 1.13 கோடி ரூபாய் கடன் தொகையை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று வழங்கினார்.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சிவமலர், மாவட்ட மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us