sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மக்கர் செய்த அரசு பஸ் மதுராந்தகத்தில் அவதி

/

மக்கர் செய்த அரசு பஸ் மதுராந்தகத்தில் அவதி

மக்கர் செய்த அரசு பஸ் மதுராந்தகத்தில் அவதி

மக்கர் செய்த அரசு பஸ் மதுராந்தகத்தில் அவதி


ADDED : மார் 05, 2025 02:04 AM

Google News

ADDED : மார் 05, 2025 02:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகத்தில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் கீழ் 24 புறநகர் பேருந்துகள், 25 நகர பேருந்துகள் இயங்குகின்றன.

மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து சூனாம்பேடு, செய்யூர், லத்துார், இடைக்கழி நாடு, பவுஞ்சூர், அச்சிறுபாக்கம், அனந்தமங்கலம், ஒரத்தி, வேடந்தாங்கல், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினமும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் உட்பட ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டில் இருந்து மதுராந்தகம் வழியாக திண்டிவனம் வரை செல்லும் தடம் எண் : 129 வி, புறநகர் பேருந்து உள்ளது.

நேற்று, செங்கல்பட்டில் இருந்து மதுராந்தகம் வந்து, பின் திண்டிவனம் செல்வதற்காக தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து இயக்க முற்பட்ட போது, பேருந்து ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்தது.

பேருந்து பயணியர் மற்றும் நடத்துநர் இறங்கி, பேருந்தை தள்ளி ஸ்டார்ட் செய்ய முற்பட்டனர்.

பேருந்தை தள்ளி ஸ்டார்ட் செய்து, திண்டிவனம் சென்றனர்.புறநகர் பகுதிக்கு பராமரிப்பின்றி உள்ள பழைய பேருந்துகளை இயக்குவதால், இதுபோன்று சிக்கல்கள் ஏற்படுகின்றன.

எனவே, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள், பேருந்துகளை ஆய்வு செய்து நல்ல நிலையில் உள்ள பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us