ADDED : ஜூலை 06, 2024 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த படூர் ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள தனியார் கல்லுாரி எதிரே கோகுல், 25, என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர், கடையில் பொருட்கள் வாங்குவது போல் பேச்சு கொடுத்துள்ளார்.
பின், சிறிது நேரத்தில் கடைக்காரரை தாக்கி அவரிடமிருந்த மொபைல்போன் மற்றும் 7,000 ரூபாயை பறித்து விட்டு தப்பியோடினார்.
இதுகுறித்து, கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் கோகுல் புகார் அளித்தார். புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.