/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கால்வாய் வசதி இல்லாததால் தேங்கிய நீரில் கொசு உற்பத்தி
/
கால்வாய் வசதி இல்லாததால் தேங்கிய நீரில் கொசு உற்பத்தி
கால்வாய் வசதி இல்லாததால் தேங்கிய நீரில் கொசு உற்பத்தி
கால்வாய் வசதி இல்லாததால் தேங்கிய நீரில் கொசு உற்பத்தி
ADDED : ஆக 24, 2024 12:15 AM

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பிரியா நகரில் அபிராமி நகர், வைகை நகர் உள்ளது. இங்கு, 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி மற்றும் மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், மழை நீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், தெரு சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லை மற்றும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி வாசிகள் கூறியதாவது:
ஊரப்பாக்கம் ஊராட்சி, அபிராமி நகர் மற்றும் வைகை நகர் பகுதியில், 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். இப்பகுதிக்கு, கழிவுநீர் கால்வாய், குடிநீர், மழைநீர் வடிகால்வாய் போன்ற எந்தவொரு அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தரவில்லை.
இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு மனு அளித்தும், தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், கடந்த சில நாட்களாக பெய்த மழையால், தெருவில் உள்ள காலி மனைகளில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம், கழிவுநீர் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.