/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இருளில் மூழ்கிய பாலாற்று பாலம் வாகன ஓட்டிகள் அச்சம்
/
இருளில் மூழ்கிய பாலாற்று பாலம் வாகன ஓட்டிகள் அச்சம்
இருளில் மூழ்கிய பாலாற்று பாலம் வாகன ஓட்டிகள் அச்சம்
இருளில் மூழ்கிய பாலாற்று பாலம் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : மார் 09, 2025 11:42 PM

கூவத்துார், கூவத்துார் அடுத்த வாயலுார் கிராமத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் பாலம் உள்ளது .
இதன் வழியாக சென்னை,புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு தினசரி இருசக்கர வாகனம், கார்,பேருந்து, லாரி, என நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. 2016 ல் ,90 கோடி ரூபாய் மதிப்பில், 1,076 மீ., நீளம்; 19 மீ., அகலம்; நான்குவழி பாதை பாலம் அமைக்கப்பட்டது.
எப்போதும் போக்குவரத்து இருக்கும் பாலாற்று பாலத்தின் இருபுறமும் 200க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாமல் மின் விளக்குகள் பழுதடைந்தன.
பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் முன்வராததால்,போதைய வெளிச்சம் இன்றி பாலம் இருளில் மூழ்கி காணப்படுகிறது.
இதனால் இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதாக சமூக ஆர்வலர்கள் அச்சப்படுகின்றனர்.
ஆகையால் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பழுதடைந்துள்ள அனைத்து மின்விளக்குகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.