/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மண்டல இயக்குனர் அலுவலகம் திறப்பு
/
மண்டல இயக்குனர் அலுவலகம் திறப்பு
ADDED : ஆக 12, 2024 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலைநகர், : மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் பகுதியில், செங்கல்பட்டு மண்டல நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலக கட்டடம், 3 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த கட்டடத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று காலை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் அலுவலக கட்டடத்தை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, மறைமலைநகர் நகர தி.மு.க., மன்ற தலைவர் சண்முகம், மறைமலைநகர் நகராட்சி ஆணையர் ரமேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

