sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாம்பாக்கத்தில் லாரி ஏறி பெயின்டர் பலி

/

மாம்பாக்கத்தில் லாரி ஏறி பெயின்டர் பலி

மாம்பாக்கத்தில் லாரி ஏறி பெயின்டர் பலி

மாம்பாக்கத்தில் லாரி ஏறி பெயின்டர் பலி


ADDED : பிப் 26, 2025 11:48 PM

Google News

ADDED : பிப் 26, 2025 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர், கல்பாக்கம் அருகே உள்ள விட்டிலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், 40. பெயின்டரான இவர், மாம்பாக்கம் பகுதியில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் பணி முடிந்து, இரவு 8:30 மணியளவில், மாம்பாக்கத்தில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றின் அருகே, சாலை ஓரத்தில் துாங்கினார்.

அப்போது அங்கு, கட்டுமான பொருட்கள் விற்பனை கடை சார்ந்த மினி லாரியை, ஓட்டுநர் சிட்டிபாபு என்பவர் பின்னோக்கி இயக்கியுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக மினி லாரியின் பின்புற சக்கரத்தில் சுரேஷ் தலை சிக்கி நசுங்கி, சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சுரேஷ் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us