/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சூணாம்பேடில் மனுநீதிநாள் முகாம்
/
சூணாம்பேடில் மனுநீதிநாள் முகாம்
ADDED : பிப் 25, 2025 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு, சூணாம்பேடு கிராமத்தில், மனு நீதிநாள் முகாம் இன்று நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
அரசு நடத்தக்கூடிய மனு நீதி நாள் முகாம், செங்கல்பட்டு மாவட்டத்தில், தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில், இம்மாதத்திற்கான மனு நீதி நாள் முகாம், செய்யூர் தாலுாகா சூணாம்பேடு குறு வட்டம், சூணாம்பேடு கிராமத்தில், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
இம்முகாமில், கிராமவாசிகள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.