/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் நெல் குவியல் வாகன ஓட்டிகள் அச்சம்
/
சாலையில் நெல் குவியல் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : செப் 07, 2024 07:25 AM

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே பூதுார் பகுதியில், 2,000 ஏக்கர் பரப்பளவில், நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
தற்போது, அறுவடை செய்யப்பட்டு, வயல் வெளியில் இருந்து டிராக்டர் வாகனங்கள் வாயிலாக கொண்டு வரும் நெல் மணிகளை உலர வைப்பதற்கு, கிராமப் பகுதியில் போதிய இடம் இல்லாததால், மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் மாநில நெடுஞ்சாலையில் கொட்டி உலர வைக்கின்றனர்.
மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் மாநில நெடுஞ்சாலையில், பூதுார் பகுதியில் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அந்த வழியை பயன்படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகள், அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
விவசாயிகளின் நெல்லை உலர வைப்பதற்கு, கூடுதலாக நெற்களம் அமைத்துத் தரக் கோரி, ஊராட்சி நிர்வாகத்தின் வாயிலாக, மாவட்ட நிர்வாகத்தினருக்கு, விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.