/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏரியில் பிளாஸ்டிக் குவிப்பு தீ வைத்து எரிப்பதாலும் அவதி
/
ஏரியில் பிளாஸ்டிக் குவிப்பு தீ வைத்து எரிப்பதாலும் அவதி
ஏரியில் பிளாஸ்டிக் குவிப்பு தீ வைத்து எரிப்பதாலும் அவதி
ஏரியில் பிளாஸ்டிக் குவிப்பு தீ வைத்து எரிப்பதாலும் அவதி
ADDED : மார் 08, 2025 11:33 PM

சிங்கபெருமாள்கோவில், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள்கோவில் ஊராட்சியில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி திருத்தேரி தாங்கல் ஏரியில், தொடர்ந்து பிளாஸ்டிக் மற்றும் கழிவு பொருட்கள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இந்த கழிவு பொருட்களில் உணவு தேடி குவியும் மாடுகள், தங்களுக்குள் சண்டையிடும் போது, சாலைக்கு வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.
அத்துடன், இங்கு குவிக்கப்படும் குப்பையை, மர்ம நபர்கள் அடிக்கடி தீ வைத்து எரிப்பதால், வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
குப்பையை மர்ம நபர்கள் எரிக்கும் சம்பவம், அடிக்கடி நடைபெற்று வருகிறது.
குப்பை கொழுந்து விட்டு எரிந்ததால், சாலை முழுதும் புகை மண்டலமாக மாறி, வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் தடுமாறுகின்றனர்.
இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் கண் எரிச்சல், சுவாச கோளாறு போன்ற பிரச்னைகளால் அவதியடைகின்றனர்.
மேலும், சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்படும் கனரக வாகனங்கள் தெரியாமல், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது.
எனவே, சாலை ஓரம் குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், குப்பையை தீ வைத்து எரிக்கும் மர்ம நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.