/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாணவிக்கு பாலியல் சீண்டல் கூலி தொழிலாளிக்கு 'போக்சோ'
/
மாணவிக்கு பாலியல் சீண்டல் கூலி தொழிலாளிக்கு 'போக்சோ'
மாணவிக்கு பாலியல் சீண்டல் கூலி தொழிலாளிக்கு 'போக்சோ'
மாணவிக்கு பாலியல் சீண்டல் கூலி தொழிலாளிக்கு 'போக்சோ'
ADDED : செப் 03, 2024 05:09 AM

கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த, 14 வயது பள்ளி மாணவியிடம், நாகராஜ் என்பவர், சில மாதங்களாக தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நாளுக்கு நாள் சீண்டல்கள் அதிகமாகவே, மாணவி பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். மாணவியின் பெற்றோர், கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் மாலினியிடம் புகார் அளித்தனர்.
போலீசார் விரைந்து சென்று, அங்கு இருந்த நாகராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், நாகராஜ், தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா தாளநத்தம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், கூலி வேலை செய்து வந்ததௌம் தெரிய வந்தது. அவர், தொடர்ந்து மாணவியிடம் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டது, விசாரணையில் உறுதியானது.
அதைத் தொடர்ந்து, போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்ற சிறையில், நேற்று மாலை அடைத்தனர்.