sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் காய்கறி விலை உயர்வு எலுமிச்சை கிலோ ரூ.100க்கு விற்பனை

/

செங்கையில் காய்கறி விலை உயர்வு எலுமிச்சை கிலோ ரூ.100க்கு விற்பனை

செங்கையில் காய்கறி விலை உயர்வு எலுமிச்சை கிலோ ரூ.100க்கு விற்பனை

செங்கையில் காய்கறி விலை உயர்வு எலுமிச்சை கிலோ ரூ.100க்கு விற்பனை


ADDED : ஜூலை 19, 2024 12:30 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:செங்கல்பட்டு மொத்த விலை காய்கறி மார்க்கெட், மகேந்திரா சிட்டி அருகில், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இருந்தும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

புடலங்காய், சுரைக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள், மொத்த விற்பனைக்காக இங்கு கொண்டு வரப்படுகின்றன.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து, காரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளும், எலுமிச்சை பழம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா போன்ற பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த காய்கறிகளை, புறநகர் பகுதி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சில்லறை விற்பனை வியாபாரிகள் வாங்கி சென்று, தங்களின் பகுதிகளில் விற்பனை செய்கின்றனர்.

மார்கெட்டிற்கு காய்கறிகள் வரத்து குறைந்து, கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை ஏறுமுகத்தில் உள்ளன.

மேலும், ஆடி மாதம் துவக்கி உள்ளதால், ஒரு கிலோ எலுமிச்சை பழம் சில்லறை விற்பனையில், கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:

எலுமிச்சை பழம் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. ஆடி மாதம் பிறந்துள்ளதால், அம்மன் பக்தர்கள் கோவிலுக்கு அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். இந்த மாதம் முழுதும், விலை சற்று கூடுதலாகவே இருக்கும்.

இவ்வாறு கூறினர்.

தக்காளி விலை ரூ.60க்கு சரிவு


கோயம்பேடு சந்தைக்கு ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தக்காளி வரத்து உள்ளது.சென்னைக்கு தினமும் 1,200 டன் தக்காளி தேவை உள்ளது. வரத்து குறைவு காரணமாக, கடந்த சில நாட்களாக, 500 முதல்- 550 டன் தக்காளி மட்டுமே வந்ததால், 1 கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் நேற்று, 650 டன் தக்காளி வந்துள்ளது. இதையடுத்து, கிலோவிற்கு 20 ரூபாய் குறைந்து, 1 கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையானது.குறிப்பாக நேற்று, சந்தையில் தக்காளி விற்பனை மந்தமானதால், வரத்து குறைவாக இருந்தும், விலை குறைந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us