sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கோவிலில் சிறுமிக்கு தொல்லை அர்ச்சகர் 'போக்சோ'வில் கைது

/

கோவிலில் சிறுமிக்கு தொல்லை அர்ச்சகர் 'போக்சோ'வில் கைது

கோவிலில் சிறுமிக்கு தொல்லை அர்ச்சகர் 'போக்சோ'வில் கைது

கோவிலில் சிறுமிக்கு தொல்லை அர்ச்சகர் 'போக்சோ'வில் கைது


ADDED : ஏப் 17, 2024 09:47 PM

Google News

ADDED : ஏப் 17, 2024 09:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பெற்றோருடன் கோவிலுக்கு சென்ற சிறுமிக்கு ஆபாச சைகை காட்டி, பாலியல் சீண்டல் செய்த அர்ச்சகரை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

திருமங்கலம் மகளிர் காவல் எல்லையில் வசிக்கும், 12 வயது சிறுமி, தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார்.

சிறுமி தன் பெற்றோருடன், கடந்த 14ம் தேதி கோவிலுக்குச் சென்றார்.

அப்போது, கோவிலில்அர்ச்சகராக பணிபுரியும் நபர், ஆபாச சைகை காட்டி சிறுமியை அழைத்துள்ளார். பின், பிரசாதம்வழங்கும் போது, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

வீட்டிற்கு வந்த சிறுமி, இதுகுறித்து தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள், திருமங்கலம்மகளிர் போலீசில் புகார் அளித்தனர். சம்பந்தப்பட்ட கோவில் அர்ச்சகரானசரவணன், 30, என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, சிறுமியிடம்பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது.

இதையடுத்து, அவரை கைது செய்த திருமங் கலம் மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துவிசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us