sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நுாறுநாள் வேலை வழங்க வேண்டி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

/

நுாறுநாள் வேலை வழங்க வேண்டி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

நுாறுநாள் வேலை வழங்க வேண்டி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

நுாறுநாள் வேலை வழங்க வேண்டி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


ADDED : மார் 03, 2025 11:31 PM

Google News

ADDED : மார் 03, 2025 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர், மதுராந்தகம் ஒன்றியத்தில், 58 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் குளம் அமைத்தல், கால்வாய் சீரமைத்தல், மரக்கன்றுகள் நடுவது போன்ற பணி மேற்கொள்ளப்படுகிறது.

ஓணம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 150க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு, இந்த திட்டத்தின் மூலமாக வேலை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது வழங்கப்பட்டுள்ள வேலை அடுத்த வாரத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில், அடுத்த வாரம் 80 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட உள்ளதாக பொதுமக்களுக்கு தகவல் தெரிந்துள்ளது.

இதனால், அனைவருக்கும் வேலைவழங்க வேண்டும் என, செய்யூர்-போளூர் மாநில நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை விட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us