sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தண்டுமாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் விழா விமரிசை

/

தண்டுமாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் விழா விமரிசை

தண்டுமாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் விழா விமரிசை

தண்டுமாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் விழா விமரிசை


ADDED : ஜூன் 30, 2024 11:00 PM

Google News

ADDED : ஜூன் 30, 2024 11:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாரிபுத்துார் ஊராட்சியில், தண்டு மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா, நேற்று, விமரிசையாக நடந்தது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்வு விமரிசையாக நடைபெறும்.

நேற்று முன்தினம், தண்டுமாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு காப்பு அணிவித்தல் நிகழ்ச்சி துவங்கி, விழா பந்தக்கால் நடப்பட்டது.

பின், அலங்கரிக்கப்பட்ட அம்மன் கரகத்தை சுமந்தபடி, விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள், வீதிகளில் உலா வந்தனர்.

முக்கிய நிகழ்வான நேற்று, காலை அம்மனுக்கு சொர்ண அபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 1:00 மணி அளவில், அம்மன் வீதி உலா நடந்தது.

பின், மாலை 3:00 மணிக்கு, தண்டுமாரியம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், தண்டு மாரியம்மன் வீதி உலா நடந்தது.

வீடுகள்தோறும் பெண்கள் கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து அம்மனை வழிபட்டனர். இரவு வாண வேடிக்கை நடந்தது.






      Dinamalar
      Follow us