/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தலையில் ரத்த காயத்துடன் முதியவர் சடலம் மீட்பு
/
தலையில் ரத்த காயத்துடன் முதியவர் சடலம் மீட்பு
ADDED : ஆக 21, 2024 09:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர், : -சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், திருக்கச்சூர் பெட்ரோல் பங்க் அருகில், நேற்று காலை, 50 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் கிடப்பதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு சோதனை செய்ததில், தலையில் ரத்தக்காயம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக, போலீசார் அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்த நபர் யார், விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமா என, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.