sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கால்நடை மருத்துவமனை பனையூரில் அமைக்க கோரிக்கை

/

கால்நடை மருத்துவமனை பனையூரில் அமைக்க கோரிக்கை

கால்நடை மருத்துவமனை பனையூரில் அமைக்க கோரிக்கை

கால்நடை மருத்துவமனை பனையூரில் அமைக்க கோரிக்கை


ADDED : பிப் 22, 2025 11:01 PM

Google News

ADDED : பிப் 22, 2025 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட பனையூர், முதலியார்குப்பம், நயினார்குப்பம், ஓதியூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பனையூர் சுற்றுவட்டாரப்பகுதியில் கால்நடை வசதி இல்லாததால், கால்நடைக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டால் 5 கி.மீ., தொலைவில் உள்ள கடப்பாக்கம் கால்நடை மருத்துவமனை அல்லது செய்யூர் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் நிலை உள்ளது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட கால்நடைகளை நீண்ட துாரம் அழைத்துச் செல்ல பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

மழைக்காலங்களில் நோய் தாக்கும் கால்நடைகளை விவசாயிகள் தொலை துாரம் கொண்டு செல்வதற்குள் அவை உயிரிழந்து விடும் சூழ்நிலையும் உள்ளது. இதனால், கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடுகிறது.

கால்நடைகள் அதிகம் வளர்க்கப்படும் பனையூர் பகுதியில், அரசு கால்நடை மருத்துவமனை அமைக்க, கால்நடைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.






      Dinamalar
      Follow us