sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சமுதாய கூடம் பாழ் சீரமைக்க கோரிக்கை

/

சமுதாய கூடம் பாழ் சீரமைக்க கோரிக்கை

சமுதாய கூடம் பாழ் சீரமைக்க கோரிக்கை

சமுதாய கூடம் பாழ் சீரமைக்க கோரிக்கை


ADDED : ஜூலை 15, 2024 06:11 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கூவத்துார் அருகில் உள்ள கடலுார் ஊராட்சி, பெரியகுப்பம் மீனவர் பகுதியில் சமுதாயக்கூடம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், சுனாமி தாக்குதல் பாதிப்பை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில அரசு, இக்கூடத்தை நன்கொடையாக அமைத்தது.

துவக்கத்தில், இங்குள்ள மீனவர்கள் விழாக்கள், சுப நிகழ்ச்சிகளை நடத்தினர். பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால், கட்டடத்தில் சுவர் விரிசல் அடைந்து, கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உடைந்து பொலிவு இழந்து காணப்படுகிறது.

எனவே, ஊராட்சி நிர்வாகம், சேதமடைந்த சமுதாய கூட கட்டடத்தை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us