sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இரவு நேர மின்வெட்டால் கூடுவாஞ்சேரி வாசிகள் அவதி

/

இரவு நேர மின்வெட்டால் கூடுவாஞ்சேரி வாசிகள் அவதி

இரவு நேர மின்வெட்டால் கூடுவாஞ்சேரி வாசிகள் அவதி

இரவு நேர மின்வெட்டால் கூடுவாஞ்சேரி வாசிகள் அவதி


ADDED : ஜூன் 23, 2024 03:16 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி : நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி மற்றும் ஊரப்பாக்கம், பெருமாட்டுநல்லுார், வண்டலுார், நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உள்ளிட்ட பகுதிகளிலும், சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

மழை பெய்ய துவங்கியதும், இப்பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பகுதிமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து, பெருமாட்டு நல்லுார் பகுதிவாசிகள் கூறியதாவது:

கடந்த சில நாட்களாக, இரவு நேரங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. மழை பெய்ய துவங்கியதும், மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

அதன்பின், பல மணிநேரம் கழித்து மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணியர் துாக்கமின்றி தவித்து வருகின்றனர்.

எனவே, நந்திவரம் - கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சீரான மின் வினியோகம் கிடைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us