sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

3 மாதமாக சாலை பணிக்கு 'ஓய்வு'

/

3 மாதமாக சாலை பணிக்கு 'ஓய்வு'

3 மாதமாக சாலை பணிக்கு 'ஓய்வு'

3 மாதமாக சாலை பணிக்கு 'ஓய்வு'


ADDED : ஆக 25, 2024 01:19 AM

Google News

ADDED : ஆக 25, 2024 01:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 1வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.

இந்த அலுவலக வளாகத்தினுள் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தார்ச்சாலை செல்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது.

இதன் காரணமாக, தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2022 -- 23ம் நிதியாண்டில், 100 மீட்டருக்கு தார்ச்சாலை அமைக்க, 6 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, பணிகள் துவக்கப்பட்டு, ஜல்லிக்கற்கள் கொட்டி சமன்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக, ஜல்லிக்கற்கள் கொட்டிய நிலையிலேயே, சாலை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியை, விரைந்து துவக்க, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us