sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் ஆபத்து

/

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் ஆபத்து

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் ஆபத்து

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் ஆபத்து


ADDED : மே 07, 2024 05:58 AM

Google News

ADDED : மே 07, 2024 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர் : சித்தாமூர் அருகே காட்டுதேவாத்துார் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேங்கும் குப்பை, துாய்மை பணியாளர்கள் வாயிலாக அகற்றப்படுகிறது.

காட்டுதேவாத்துார் பஜார் பகுதியில் செயல்படும் இறைச்சி கடைகளில், முறையாக மாமிச கழிவுகளை அப்புறப்படுத்தாமல், கோழி இறகுகள், குடல், கால் போன்றவற்றை, செய்யூர் - சித்தாமூர் சாலை ஓரத்தில் கொட்டி வருகின்றனர். செய்யூர் - சித்தாமூர் சாலையில், தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

சாலையோரம் கொட்டப்படும் மாமிச கழிவுகளால் துர்நாற்றம் வீசப்படுவதால், அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, இறைச்சி கழிவு களை அகற்றி, சாலை ஓரத்தில் கழிவுகள் கொட்டும் இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us